google-site-verification: googlef09a89005d7755ea.html நாலடியார் | பாடல் & விளக்கம்

நாலடியார் | பாடல் & விளக்கம்

நாலடியார் 

நாலடியார் என்பது சங்க காலத்திற்குப் பிந்தைய அறநெறி நூல்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இது பல்வேறு புலவர்கள் பாடிய நானூறு வெண்பாக்களின் தொகுப்பாகும். ஒவ்வொரு வெண்பாவும் நான்கு அடிகளைக் கொண்டிருப்பதால் இது நாலடியார் எனப் பெயர் பெற்றது. வேளாண்மைத் தொழில் செய்பவர்களின் வாழ்வியல் பின்னணியில் இருந்து பல கருத்துக்கள் கூறப்பட்டிருப்பதால் இது "வேளாண் வேதம்" என்றும் அழைக்கப்படுகிறது.

கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ்ஞான்றும்

குருத்திற் கரும்புதின் றற்றே; – குருத்திற்கு

எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்

மதுரம் இலாளர் தொடர்பு.  (1)

நூல்களின் உட்பொருளை உணர்ந்து கற்று அறிந்தவருடன் கொண்ட நட்பு எப்போதும் குருத்திலிருந்து கரும்பைத் தின்பது போலாம். எக்காலத்தும் நன்மையில்லாதாரிடம் கொண்ட நட்பு, கரும்பை அடியிலிருந்து நுனியை நோக்கித் தின்பது போலும் தன்மையுடையதாகும். (கரும்பை நுனியிலிருந்து தின்றால் வரவர இனிமை அதிகமாவதுபோல், கற்றோர் நட்பு நாளுக்கு நாள் இனிமை மிகும்; அதற்கு எதிர் செலத் தின்றால் வரவர இனிமை குறைவதுபோல் கல்லாதார் நட்புச் சுவை குறைந்து வெறுக்கப்படும் என்பதாம்).

இற்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர்

நற்புடை கொண்டமை யல்லது – பொற்கேழ்

புனலொழுகப் புள்ளரியும் பூங்குன்ற நாட!

மனமறியப் பட்டதொன் றன்று. (2)

பொன்னைக் கொழித்து விழும் அருவியின் ஓசையால் பறவைகள் அஞ்சி ஓடுதற்கு இடமான அழகிய மலைகள் உள்ள நாட்டையுடைய மன்னனே! ஒருவா¢ன் உயர் குடிப்பிறப்பை நோக்கி, ‘இவர் இடையில் மாறமாட்டார்’ என்னும் நம்பிக்கையால் நட்புக் கொள்வதேயல்லாமல், பிறருடைய மனநிலையை அறிந்து நட்புக் கொள்வது என்பதில்லை.

(எனினும் நட்புக்கு மனக்கருத்தும் அறிதல் வேண்டும் என்பது உட்பொருள்).

யானை யானையவர் நண்பொரிஇ நாயனையார்

கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் – யானை

அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்

மெய்யதா வால்குழைக்கும் நாய். (3)

யானை போன்ற பெருமையுடையார் நட்பை விலக்கி, நாய் போன்ற இழிவுத் தன்மை உடையராயினும் அவரது நட்பை விரும்பிக் கொள்ளல் வேண்டும். ஏனெனில் யானை பலநாள் பழகியிருந்தும் சமயம் வாய்க்கும்போது பாகனையே கொல்லும்! ஆனால் நாயோ, தன்னை வளர்த்தவன் சினம் கொண்டு எறிந்த வேலானது தனது உடலில் அழுந்திக் கிடக்க, அவனைக் கண்டதும் வாலை ஆட்டி அவன் அருகே செல்லும்.

(கல்வி நலம், குல நலம் ஆகியவற்றை மட்டுமே கருதாமல், மனநலத்தையும் அறிந்து ஒருவா¢டம் நட்புக்கொள்ள வேண்டும். அகன்ற கல்வியும், சிறந்த குடியும் இல்லையெனினும் மனம் தூயராயின் அவருடன் நட்புக் கொள்ளலாம் என்பது கருத்து.)

பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்

சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; – பலநாளும்

நீத்தார் எனக்கை விடலுண்டோ , தம்நெஞ்சத்து

யாத்தாரோடு யாத்த தொடர்பு. (4)

பலநாட்களாகப் பக்கத்தில் இருந்து பழகுவராயினும் சில பொழுதேனும் தன் மனத்துடன் பொருத்தமில்லாதரோடு அறிவுடையோர் சேரமாட்டார்கள். அங்ஙனமின்றித் தம் நெஞ்சம் பிணித்தாரோடு கொண்ட நட்பினை, தம்மை விட்டுப் பல நாட்கள் விலகியிருந்தார்கள் என்பதற்காக அவர்களைக் கைவிடுவார்களோ? (மனப்பொருத்தம் உடையாரை நண்பராகக் கொள்ள வேண்டும் என்பது கருத்து. ‘புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான் நட்பாங்கிழமை தரும்’ என்பது குறள்).

கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது

வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; – தோட்ட

கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை

நயப்பாகும் நட்பாரும் இல். (5)

கொம்பிலே பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் உதிரும் வரை குவியாதிருத்தல் போல, முதல் நாள் உள்ளம் மகிழ்ந்து விரும்பியது போலவே முடிவு வரையில் மகிழ்ந்து விரும்பியிருப்பது நட்புடைமையாகும். அப்படியின்றி, தோண்டப்பட்ட குளத்திலே இருக்கும் பூவைப் போல முதலில் மலர்ச்சியைக் காட்டிப் பின்பு முகம் சுருங்கும் தன்மையுடையவரை விரும்புவாரும் இல்லை; நட்புச் செய்வாரும் இல்லை. (என்றும் முகமலர்ச்சியுடன் பழகுவரே நட்புக்கு அழகாம்).

கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை

இடையாயார் தெங்கின் அனையர்; – தலையாயார்

எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,

தொன்மை யுடையார் தொடர்பு.  (6)

நட்புத் தன்மையில் கடையாயவர், நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சிப் பராமரிக்க உதவும் பாக்கு மரம் போல, நாள்தோறும் உதவி செய்தால்தான் பயன்படுவர்; இடையாயவர், விட்டு விட்டு நீர் பாய்ச்சிக் கவனித்து வந்தால் உதவும் தென்னை மரம்போல அவ்வப்போது உதவி செய்தால் பயன்படுவர்; தொன்மைத் தொடர்பு பாராட்டும் (ஒரு முறை செய்த நட்பினைப் போற்றும்) தன்மையுடைய தலையாயவர். விதையிட்ட நாளில் வார்த்த தண்ணீரன்றிப் பிறகு ஒரு பராமரிப்பும் செய்யாமலே உதவும் மதிப்பு மிக்க பனைமரம் போல் பயன்படுவர்.

கழுநீருள் காரட கேனும் ஒருவன்

விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்; – விழுமிய

குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்

கைத்துண்டல் காஞ்சிரங் காய். (7)

அரிசி கழுவிய நீரிலே உப்பின்றி வெந்த, கறுத்த கீரைக் கறியானாலும் ஒருவன் (நண்பா¢டமிருந்து) அன்புடன் பெற்றால் அ·து அமிழ்தமாகும். (ஆனால்) சீரிய தாளிப்பினையுடைய துவையலுடன் கூடிய வெள்ளிய சோறேயாயினும், அன்பிலாதார் கையிலிருந்து வாங்கி உண்பதாயின், அ·து எட்டிக் காயைத் தின்பது போலாம். (உணவின் சுவையும் நட்பினர் பண்புக்கு ஏற்ப அமையும்).

நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்

ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?

சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்

வாய்க்கால் அனையார் தொடர்பு. – 8

நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல மிகவும் நெருக்கம் உள்ளவராக இருந்தாலும், ஈயின் காலளவாயினும் உதவி செய்யாதவர் நட்பினால் என்ன பயன் உண்டாகும்? ஒரு பயனும் உண்டாகாது. ஆதலால், வயலை விளையும்படி செய்கின்ற வாய்க்காலைப் போன்றவா¢ன் நட்பினை, தூரத்தில் இருப்பதாயினும் போய்க் கொள்ளல் வேண்டும். (வயலால் தனக்கு ஒரு பயனும் இல்லையாயினும் தூரத்து நீரைக் கொணர்ந்து வயலை விளைவிக்கும் வாய்க்கால் போலும் பண்புடையாரது நட்பினை நாடிப் பெற வேண்டும் என்பது கருத்து).

தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்

விளியா அருநோயின் நன்றால் – அளிய

இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்லா

புகழ்தலின் வைதலே நன்று. (9)

அறிவுத் தெளிவில்லாதவர் நட்பைவிட அவர் பகை நல்லது; மருந்தினால் தீராத கொடிய நோயை விடச் சாதல் நல்லது; ஒருவரது மனம் மிகவும் வருந்தும்படி இகழ்தலைவிட அவரைக் கொல்வது நல்லது; ஒருவா¢டம் இல்லாத சிறப்புக்களைக் கூறிப் புகழ்தலைவிட அவரைப் பழித்தல் நல்லது. (நோயினும் சாதல் நன்றாதல் போல, புகழ்தலை விடப் பழித்தல் நன்றாதல் போல, அறிவிலார் நட்பைவிடப் பகை நல்லது என்பது கருத்து).

மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்

பொரீஇப் பொருள்தக்கார்க் கோடலே வேண்டும்

பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா

மரீஇப் பின்னைப் பிரிவு. (10)

பலருடன் சேர்ந்து பலநாள் கலந்து பழகிப் பலருடைய குணங்களையும் ஒப்பிட்டு அறிந்து தகுதியுடைய மேலோரை நண்பராகக்கொள்ள வேண்டும். ஏனெனில் பல்லினால் கடித்து உயிரைக் கொல்லும் பாம்போடாயினும், பழகிவிட்டுப் பின் பிரிதல் துன்பம் தருவதாகும்.

(கூடிப் பழகியபின் பிரிதல் துன்பம் ஆதலின், முன்பே ஒருவரது குணங்களை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும் என்பது கருத்து).







விதையிட்ட நாளில் வார்த்த தண்ணீரன்றிப் பிறகு ஒரு பராமரிப்பும் செய்யாமலே உதவும் மதிப்பு மிக்க பனைமரம் போல் பயன்படுவர்.

கழுநீருள் காரட கேனும் ஒருவன்

விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்; – விழுமிய

குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்

கைத்துண்டல் காஞ்சிரங் காய். – 7

அரிசி கழுவிய நீரிலே உப்பின்றி வெந்த, கறுத்த கீரைக் கறியானாலும் ஒருவன் (நண்பா¢டமிருந்து) அன்புடன் பெற்றால் அ·து அமிழ்தமாகும். (ஆனால்) சீரிய தாளிப்பினையுடைய துவையலுடன் கூடிய வெள்ளிய சோறேயாயினும், அன்பிலாதார் கையிலிருந்து வாங்கி உண்பதாயின், அ·து எட்டிக் காயைத் தின்பது போலாம். (உணவின் சுவையும் நட்பினர் பண்புக்கு ஏற்ப அமையும்).

நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்

ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?

சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்

வாய்க்கால் அனையார் தொடர்பு. – 8

நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல மிகவும் நெருக்கம் உள்ளவராக இருந்தாலும், ஈயின் காலளவாயினும் உதவி செய்யாதவர் நட்பினால் என்ன பயன் உண்டாகும்? ஒரு பயனும் உண்டாகாது. ஆதலால், வயலை விளையும்படி செய்கின்ற வாய்க்காலைப் போன்றவா¢ன் நட்பினை, தூரத்தில் இருப்பதாயினும் போய்க் கொள்ளல் வேண்டும். (வயலால் தனக்கு ஒரு பயனும் இல்லையாயினும் தூரத்து நீரைக் கொணர்ந்து வயலை விளைவிக்கும் வாய்க்கால் போலும் பண்புடையாரது நட்பினை நாடிப் பெற வேண்டும் என்பது கருத்து).

தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்

விளியா அருநோயின் நன்றால் – அளிய

இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்லா

புகழ்தலின் வைதலே நன்று. – 9

அறிவுத் தெளிவில்லாதவர் நட்பைவிட அவர் பகை நல்லது; மருந்தினால் தீராத கொடிய நோயை விடச் சாதல் நல்லது; ஒருவரது மனம் மிகவும் வருந்தும்படி இகழ்தலைவிட அவரைக் கொல்வது நல்லது; ஒருவா¢டம் இல்லாத சிறப்புக்களைக் கூறிப் புகழ்தலைவிட அவரைப் பழித்தல் நல்லது. (நோயினும் சாதல் நன்றாதல் போல, புகழ்தலை விடப் பழித்தல் நன்றாதல் போல, அறிவிலார் நட்பைவிடப் பகை நல்லது என்பது கருத்து).

மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்

பொரீஇப் பொருள்தக்கார்க் கோடலே வேண்டும்

பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா

மரீஇப் பின்னைப் பிரிவு. -10

பலருடன் சேர்ந்து பலநாள் கலந்து பழகிப் பலருடைய குணங்களையும் ஒப்பிட்டு அறிந்து தகுதியுடைய மேலோரை நண்பராகக்கொள்ள வேண்டும். ஏனெனில் பல்லினால் கடித்து உயிரைக் கொல்லும் பாம்போடாயினும், பழகிவிட்டுப் பின் பிரிதல் துன்பம் தருவதாகும்.

(கூடிப் பழகியபின் பிரிதல் துன்பம் ஆதலின், முன்பே ஒருவரது குணங்களை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும் என்பது கருத்து).

Post a Comment

0 Comments